Published : 08 May 2016 09:59 AM
Last Updated : 08 May 2016 09:59 AM

தமிழகத்தில் பரவலாக கோடை மழை: கொடைக்கானலில் இடியுடன் 5 மணி நேரம் மழை பெய்தது

தமிழகத்தில் நேற்று பரவலாக கோடை மழை பெய்தது. கடும் அனல் காற்றில் தவித்த மக்க ளுக்கு இந்த திடீர் மழை ஆறுதலை தந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாகவும், கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களிலும், திருப்பூர் மாவட்டத் திலும் நேற்று மழை பெய்தது. கோவை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது.

தென் மாநிலங்களில் பிரபல மான சுற்றுலா தலமாக விளங்கும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் 5 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து பெய்தது. கொடைக்கானலில் ஏப்ரலில் தொடங்கிய கோடை மழை தொடர்ந்து பெய்யாத தால் கோடை சீசன் தொடங்கிய சில தினங்கள் மலைப்பகுதியில் இதமான தட்பவெப்பநிலை நிலவி யது. பின்னர் மீண்டும் வெயிலின் தாக்கம் மலைப்பகுதிகளிலும் காணப்பட்டது. அவ்வப்போது சிறிய சாரல் மழை பெய்துவந்தா லும் வெயிலின் கடுமை குறை யவில்லை. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் எதிர்பார்த்து வந்த குளுமையான சீதோஷ்ணநிலை இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் காணப் பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் பர வலாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை வரை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. தொடர் மழையால் நேற்று வெயிலின் தாக்கம் வெகு வாகக் குறைந்து இதமான தட்பவெப்பநிலை நிலவுகிறது. மழை காரணமாக கொடைக் கானல் ஏரிச்சாலையில் இருந்த பழமையான மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.

கரூர், திருச்சியில்..

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100 டிகிரிக்கு அதிகமாகவே வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் கரூர், அரவக் குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதிக அளவாக அரவக்குறிச்சி யில் 107 மி.மீ. பொழிந்துள்ளது. திருச்சியிலும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி, குற்றாலம், செங் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை அரை மணி நேரம் இடியுடன் மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத் தில் அதிகபட்சமாக 48 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x