Published : 09 May 2016 03:43 PM
Last Updated : 09 May 2016 03:43 PM

தமிழ்நாட்டின் குரலை மத்தியில் எழுப்ப ஆளில்லை: மதுரையில் சுப்பிரமணியன் சுவாமி ஆதங்கம்

தமிழ்நாட்டின் குரலை மத்தியில் எழுப்ப ஆளில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சுப்பிரமணியன் சுவாமி நேற்று பிரச்சாரம் செய்தார். மதுரை ஜீவா நகரில் அவர் பேசியதாவது:

ஊழலில் திமுக, அதிமுகவுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. முத ல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை அளித் திருந்தாலும் இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. அதனால் அவர் சிறைக்கு செல்வது உறுதி. அதுபோல் திமுகவிலும் அன்று பூச்சி மருந்து ஊழலில் தொடங்கி, இன்று 2ஜி வரை ஊழல் செய்தவர்கள் உள்ளனர். ஆனால், பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒரு துறையிலாவது ஊழல் நடந்ததாக சொல்லமுடியுமா?

பிரதமர் நரேந்திர மோடி மீது யாராவது விரல் நீட்டி சிறிய ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்ல முடியுமா? அரசு மீது ஒரு சில துறை ரீதியான விமர்சனங்கள் இருக்கலாம். அதற்கு தீர்வு காணவும் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. பாஜக கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கிற திமுக, அதிமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. இரண்டு பேருமே குடும்ப அரசியல் செய்கின்றனர். இவர்கள் கட்சியில் தலைவர்களை பார்த்தால் நிர்வாகிகள் கும்பிட வேண்டும். காலில் விழ வேண்டும். ஆனால், மோடி முன் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவரிடம் மாற்றுக் கருத்தை எடுத்துச் சொல்லலாம். ஜெயலலிதா வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறார். திமுக தலைவர் கருணாநிதி குடும்ப நலனுக்காக தமிழக நலனை கண்டுகொள்வதில்லை. மத்தியில் தமிழ்நாட்டின் குரலை எழுப்ப ஆளில்லை. அதனால், மத்தியில் தமிழகத்தின் குரலை எழுப்பவும், ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x