Published : 23 Jun 2022 11:08 AM
Last Updated : 23 Jun 2022 11:08 AM

மண்டபத்தில் எழுப்பப்பட்ட 'எடப்பாடியார் வாழ்க' கோஷம்: அமைதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடியார் வாழ்க என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

இபிஎஸ் வாழ்க கோஷம்: பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அமைதிப்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச்செல்வன் பொதுக்குழு உறு்பபினர்களை அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். இருப்பினும்,

ஆலோசனை அறையில் காத்திருப்பு: பொதுக்குழுக் கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் விழா மேடைக்கு செல்லவில்லை. மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்திருக்கிறார்.

வரவேற்பு இல்லை: பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள் யாரும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கவில்லை. அவருடன் வருகை தந்திருந்த வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் வந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x