போலீஸாரின் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஆர்டிஐ கீழ் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்

போலீஸாரின் சாதி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஆர்டிஐ கீழ் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: சாதி மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை தகவல் உரிமை சட்டத்தில் வெளிப்படையாக வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை கேட்டு பரமசக்தி என்ற ரூபா 14.8.2021-ல் மனு அனுப்பினார். இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தகவல் ஆணையரிடம் 9.10.2021-ல் மேல் முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனு மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி பரமசக்தி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். தகவல் ஆணைய வழக்கறிஞர் வாதிடுகையில், தகவல் ஆணையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மேல்முறையீடு மனுக்கள் நிலுவையில் உள்ளன. வரிசைப்படியே மேல்முறையீடு மனுக்கள் மீது முடிவெடுக்க முடியும். மனுதாரரின் மேல்முறையீடு மனுவை உடனடியாக எடுத்து முடிவெடுக்க முடியாது என கூறினார்.

வழக்கறிஞர் வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர் காவல் துறை அதிகாரிகளின் சாதி மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை தகவல் உரிமை சட்டத்தில் கேட்டுள்ளார். இந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் தனியுரிமையை மீறுவதாகும். அதுபோன்ற தகவல்களை வெளிப்படையாக வழங்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in