Published : 22 Jun 2022 04:26 AM
Last Updated : 22 Jun 2022 04:26 AM

தமிழகத்தின் ஒருசில இடங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 21-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 8 செமீ, திருவாலங்காடு, பூண்டி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், வேலூர் மாவட்டம் பொன்னை அணை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், சென்னை வில்லிவாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x