Published : 11 May 2016 12:44 PM
Last Updated : 11 May 2016 12:44 PM

நாட்டின் முதுகெலும்பை முறித்த மத்திய, மாநில அரசுகள்: ராமதாஸ் குற்றச்சாட்டு

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை மத்திய, மாநில அரசுகள் முறித்துவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் பாமக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்ட ராமதாஸ் பேசியது: ஊழல், மது ஆகியவற்றால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நாட்டைச் சீரழித்துவிட்டனர். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க தண்டனை வழங்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம், சொத்துக்குவிப்பு வழக்குகளில் அடுத்த மாதம் தீர்ப்பு வரப்போகிறது. மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் சிறைக்குச் செல்வது உறுதி.

விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். மத்திய, மாநில அரசுகள் அந்த முதுகெலும்பை முறித்துவிட்டன. நாங்கள் கடந்த 6 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் உருவாக்கி வருகிறோம். சிறிய பணிகளுக்கு கூட லஞ்சம் வாங்கி, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள், தற்போது வாக்குக்கு பணம் வழங்க வருகிறார்கள். மதிப்புமிக்க வாக்கை விற்கக்கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x