Published : 23 May 2016 09:19 AM
Last Updated : 23 May 2016 09:19 AM

கொளத்தூரில் 3 நாள் சுற்றுப்பயணம்: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை கொளத்தூர் தொகுதி யில் 2-வது முறையாக போட்டியிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரைவிட 37 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கொளத்தூர் தொகுதி வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று (திங்கள்கிழமை) அயனாவரம் பேருந்து நிலையம் தொடங்கி எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு தெரு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

24-ம் தேதி கொளத்தூர் அண்ணா சாலையில் தொடங்கி அரிதாஸ் தெரு, பஜனை கோயில் தெரு, எஸ்.வி.எம். பாடசாலை தெரு, காமராஜ் தெரு, வசந்தம் நகர், பூம்பு கார் நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரவிக்கிறார். 25-ம் தேதி கொளத்தூர் கோபாலபுரம் சந்திப்பில் தொடங்கி ஆண்டாள் அவென்யூ 1-வது தெரு, காந்திமதி தெரு, மணவாளன் தெரு, வரதராஜன் தெரு, குமரன் நகர் சந்திப்பு. சக்திவேல் நகர், பேப்பர் மில்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x