அக்னி பாதை | அறவழிப் போராட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்

அக்னி பாதை | அறவழிப் போராட்டங்களை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: சீமான்
Updated on
1 min read

சென்னை: "அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத் தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அக்னி பாதை திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்களது போராட்டக் கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன். அவர்களுக்குத் துணை நிற்கிறேன்.

அக்னிபாதை திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை மாநிலமெங்கும் முன்னெடுக்கும் எனப் பேரறிவிப்பு செய்கிறேன்.

அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்திருக்கிற திமுக அரசு, அதே கோரிக்கைக்காகப் போராடும் இளைஞர்கள்மீது வழக்குகளைத்தொடுக்கும் கொடுங்கோல் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அறவழிப்போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in