Published : 03 May 2016 09:08 AM
Last Updated : 03 May 2016 09:08 AM

சென்னைக்கு துணை ராணுவம் வருகை

சென்னை மாவட்ட தேர்தல் பணிக்கு 18 கம்பெனி துணை ராணுவப் படை வர இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தர மோகன் தலைமை வகித்தார். சென்னையில் உள்ள தொகுதிக ளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்கள், மாநகர காவல் ஆணையர் அசு தோஷ் சுக்லா மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முன்னேற்பாடுகள், தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், தொகுதி வாரியாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பதற்றமான வாக்குச் சாவடிகள், துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட வேண்டிய வாக்குச் சாவடிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறக்கும்படைகள் மேற்கொண்டுள்ள பணிகள், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தெரிவித்த புகார்கள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தேர்தல் பார்வைாயளர் களுக்கு விளக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x