

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம் என்ற முதல்வர் மு.க..ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.