Published : 20 Jun 2022 11:16 AM
Last Updated : 20 Jun 2022 11:16 AM

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு | அரசுப் பள்ளிகளில் 85.25 சதவீதம் தேர்ச்சி:  886 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: 10 ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 85.25 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 886 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439, மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120, மூன்றாம் பாலினத்தவர் ஒருவர்.

இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர். தேர்ச்சி சதவீதம் 90.07. இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 12,714 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.25 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.01 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.31 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 90.37 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 79.33 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 4,006 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 886 ஆகும்.

அறிவியல் பாடத்தில் அதிகம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

42 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை

6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றனர். சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 242 பேரில், 133 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த எண்ணிக்கை, கடந்த 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் ஆகும். 2019-ம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x