‘ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத தலைமை வேண்டும்' - முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி

‘ஓபிஎஸ், இபிஎஸ் இல்லாத தலைமை வேண்டும்' - முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி
Updated on
1 min read

கோவை: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தற்போது ஜாதிக் கட்சியாகப் போகிறது.

அந்த நிலை வரக்கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகிய இருவரும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கட்சி இரண்டாக பிளவுபடும்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இல்லாமல் ஒற்றைத் தலைமை வரட்டும். கட்சியிலிருந்து பல பேரை நீக்கியுள்ளனர். சசிகலா இல்லையெனில் பழனிசாமி முதல்வராகியிருக்க முடியுமா? ஓ.பன்னீர்செல்வம் வளர்ந்திருக்க முடியுமா? இருவரும் நன்றியை மறந்துள்ளனர். ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் கட்சியில் ஆதரவு இல்லை. உண்மையான நிலை அதுதான் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in