Published : 14 May 2016 12:39 PM
Last Updated : 14 May 2016 12:39 PM

அதிகாரிகளை மிரட்டும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது: பர்கூரில் நடிகர் ஆனந்தராஜ் திட்டவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் ஆனந்தராஜ், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பர்கூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஆனந்தராஜ் பேசியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் மின்சாரம் எப்போது வரும் என காத்திருந்த நிலையை மாற்றியவர் ஜெயலலிதா. தற்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

விவசாயிகள் பற்றி பேசும் திமுக தலைவர் கருணாநிதி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பழைய மோட்டாருக்கு, புதிய மோட்டார் வழங்கப்படும் என்றார். ஆனால், விலையில்லா மின்பொருட்களை மக்களுக்கு வழங்கியவர் ஜெயலலிதா.

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், அரசு அதிகாரிகள், காவல்துறையினரை மிரட்டுகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x