Published : 09 May 2016 12:31 PM
Last Updated : 09 May 2016 12:31 PM

வாக்கிங்கில் வாக்கு சேகரிப்பு: அதிமுக கொடி ஆட்டோவின் ஓட்டுநரிடம் கைகுலுக்கிய ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று அதிகாலையில் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

கும்பகோணம் தாராசுரம் காய்கறி சந்தை பகுதிக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம், திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இளைஞர்கள், இளம்பெண்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது, அதிமுக கொடியுடன் அங்கு வந்த ஆட்டோவின் ஓட்டுநரிடமும் கைகுலுக்கி, வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து, ஆடுதுறை சென்ற ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியை சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னதாக, தஞ்சை கீழவாசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், ‘மக்களவை, மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 49 எம்பிக்கள் இருந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை ஜெயலலிதா நிர்ப்பந்தம் செய்யவில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இப்பிரச்சினையில் ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. இதன்மூலம், காவிரியில் தமிழக உரிமையைத் தாரை வார்த்தவர் ஜெயலலிதா’ என்று குற்றம்சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x