Published : 14 May 2016 10:04 AM
Last Updated : 14 May 2016 10:04 AM

பணத்தை மட்டுமே நம்பும் அதிமுக, திமுக: ஜி.ராமகிருஷ்ணன் புகார்

உடுமலையில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக, திமுக என்று 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆளை மாற்றிப் பார்த்தோம். ஆனாலும் அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்படாதபோது, அரசியல் மாற்றத்தை உருவாக்கவே மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஊழலற்ற ஒரு நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தேமுதிக மக்கள் நலக் கூட்டணியின் நோக்கம். திமுக, அதிமுக இரு கட்சிகளுமே 5 ஆண்டு ஆட்சியை, தேர்தலை நம்பவில்லை, பணத்தை மட்டுமே நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு பணம் கொடுப்பதன் மூலம் வாக்குகளை பெற்றுவிட முடியும் என எண்ணுகின்றனர். ஆனால் தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை உருவாக்க முடிவெடுத்துவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x