Published : 18 May 2016 10:02 AM
Last Updated : 18 May 2016 10:02 AM

இந்திய பண்பாடு பாடத்தில் 2-ம் இடம் பிடித்த மாணவர்: ஐஏஎஸ் அதிகாரியாக விருப்பம்

இந்திய பண்பாடு பாடத்தில் ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் மாணிக்கம் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர் ஆர்.மாணிக்கம். கலைப் பிரிவில் இந்திய பண்பாடு பாடம் எடுத்து படித்தார். இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்திய பண்பாடு பாடத்தில் 194 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாணவரை பள்ளித் தலைமை ஆசிரியை கே.பரிமளாதேவி, ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் பாராட்டினர். இதுகுறித்து மாணவர் மாணிக்கம் கூறியதாவது: பாடத்தில் கவனம் செலுத்த வைத்து ஊக்கமளித்த ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு நன்றி. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதே லட்சியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x