நாமக்கல் | மக்கள் குறைதீர் கூட்டத்தில் அலுவலக உதவியாளர் உயிரிழப்பு

உயிரிழந்த அலுவலக உதவியாளரின் உடல், உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உயிரிழந்த அலுவலக உதவியாளரின் உடல், உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புகார் மனுக்கள் கொடுக்க வரும் மக்களிடம் உடனுக்குடன் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம். இந்தக் கூட்டத்தில் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்தன் (56) என்பவரும் கலந்து கொண்டார்.

திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in