Published : 11 May 2016 09:51 AM
Last Updated : 11 May 2016 09:51 AM

ராகுல் பிரச்சாரம் 13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நாகர்கோவிலில் காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம், நேற்று நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்க இருந்தது. இதற்கான பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியும் நடைபெற்றது. ஆனால், அவருக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு ராகுல் காந்தியின் பயணம் ரத்து செய்யப்பட்டு, 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப் பட்டது. அன்று இரவு 7.30-க்கு இதே மைதானத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x