Published : 08 Jun 2022 07:12 PM
Last Updated : 08 Jun 2022 07:12 PM

கரூர் | ஆம்னி பேருந்து மோதி பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் பலியான மணிவேல், கந்தன்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆம்னி பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கந்தன் (55), மரம் அறுக்கும் தொழிலாளி. உள்மணத்தட்டையைச் சேர்ந்த மணிவேல் (29) பேக்கரி மாஸ்டர். இவர்கள் இருவரும் வளையப்பட்டியில் நடந்த கோயில் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். கந்தன் வாகனத்தை ஓட்ட, மணிவேல் பின்னால் அமர்ந்து வந்துள்ளார்.

கரூர் திருச்சி சாலையில் மருதூர் சோதனைச் சாவடி அருகே நேற்றிரவு வந்தபோது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த ஆம்னி பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் படு காயமடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கந்தன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x