ஆவின் பால் தாராளமாக கிடைக்க ஓபிஎஸ் கோரிக்கை

ஆவின் பால் தாராளமாக கிடைக்க ஓபிஎஸ் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் கிடைப்பதில்லை, இதனால் கூடுதல் விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல, பெரும்பாலான பாலகங்களில் சிறிய அளவிலான பால்கோவா, 100, 200கிராம் நெய் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே,முதல்வர் தனி கவனம் செலுத்தி,பால் மற்றும் உப பொருட்கள்தடையின்றிக் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in