Published : 02 May 2016 12:20 PM
Last Updated : 02 May 2016 12:20 PM

எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல்: தமிழிசை பரபரப்பு

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அவருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து தமிழிசை கூறும்போது, "தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதில், இந்தத் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கவில்லை என்றால், உங்கள் கார் மீது லாரி ஏற்றிக் கொன்றுவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறது.

கொலை மிரட்டலைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. இதற்காக மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசாமலும் இருக்கப்போவதில்லை.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவருக்கே இந்த நிலை என்றால் மற்ற கடைநிலைத் தொண்டர்களுக்கு எத்தகைய மிரட்டல் எல்லாம் வரும் என்பதே எனது கவலை. இந்த மிரட்டல் குறித்து நிச்சயமாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும்.

அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஒரு ஜனநாயகக் களம் போர்க்களமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளேன். எனக்கு கூடுதல் பாதுகாப்பு கேட்கப்போவதில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x