Published : 16 May 2016 11:15 AM
Last Updated : 16 May 2016 11:15 AM

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தலுக்குப் பிறகே வாக்கு எண்ணிக்கை: திருமாவளவன் வலியுறுத்தல்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அங்கனூரில் வாக்களித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு வாக்குகள் பெறும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x