Published : 10 May 2016 08:46 AM
Last Updated : 10 May 2016 08:46 AM
திருச்சியில் செய்தியாளர்களிடம் இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று கூறியது: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே கொள்கையைக் கொண்டவை. அனைத்துத் துறைகளிலும் ஊழல், லஞ்சம் அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் இளைஞர்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக, அவர்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர்.
வேலைவாய்ப்பு உருவாகவில்லை. புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வரத் தயங்குகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்தால், தமிழகத்தில் விரைவில் புரட்சி வெடிக்கும். இவ்வாறு கூறினார்.
பின்னர் ஆலங்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, ‘தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விதவைகளின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இலவச செல்போனால் மாணவர்கள் சீரழியும் நிலை உருவாகும்’ என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT