Published : 05 Jun 2022 04:23 AM
Last Updated : 05 Jun 2022 04:23 AM

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திக்குமார் சுகுமார குரூப், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி. தமிழ்ச்செல்வி ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார்.

இவர்களில் நீதிபதி சத்திக்குமார் சுகுமார குரூப் தவிர்த்து மற்ற 8 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சத்திக் குமார் சுகுமார குரூப் வேறு ஒரு நாளில் பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x