திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி நம்பிக்கை

திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி நம்பிக்கை
Updated on
1 min read

தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும் என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

திமுக மகளிரணி தலைவர் கனிமொழி சென்னை மயிலாப்பூரில் வாக்களித்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ''ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in