Published : 04 May 2016 09:31 AM
Last Updated : 04 May 2016 09:31 AM
இலங்கை கடற்படையினரி டமிருந்து மீனவர்களைப் பாதுகாக்க முதல்வர் ஜெய லலிதா எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கூறினார்.
நாகை மாவட்டம் வேதாரண் யம் தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் பி.வி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாய்மேடு கடைவீதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசியது:
திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பாதிக் கப்பட்ட போதெல் லாம், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி யில் இலங்கை கடற் படையினரிடமிருந்து மீனவர்களைப் பாது காக்க முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. பிரதமருக்கு கடிதம் எழுதியதோடு சரி.
மீனவர்களுக்காக பிரதமரை அவரோ, அவரது கட்சி எம்.பி.க்களோ சந்தித்ததே கிடையாது. ஆனால், தற் போது அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் முறையிட எம்பிக் களை அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கீழ்வேளூர், நாகை, பூம்புகார், மயிலாடு துறை, சீர்காழியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT