Published : 20 May 2016 09:42 AM
Last Updated : 20 May 2016 09:42 AM

முதல்வர் ஜெ.வுக்கு பிரதமர், ஆளுநர் வாழ்த்து

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரோசய்யா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்தபோதே அதிமுக 130 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

அதேபோல தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் தொலைபேசியில் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு ஜெயலலிதா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மத்திய தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x