ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
Updated on
1 min read

சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத் தத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 650 படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கிருந்து ஜூன் 6-ம் தேதி மீன்பிடிக்க 7 படகுகளில் சென்ற 26 மீனவர்களை அன்று இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதோடு 6 படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஒரு படகை சேதப்படுத்தி கடலில் மூழ்கடித்துச் சென்றுவிட்டனர்.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால், சிறைபிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பதுடன், சேதப்படுத்தப்பட்ட படகுக்கு இழப்பீடும் இலங்கை அரசு வழங்க வலியுறுத்தி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் புதன்கிழமை முதல் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தளத்தில் இருந்து சுமார் 300 படகுகளில் மீன்பிடிக்கச் செல்லாமல் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in