Published : 18 May 2016 09:58 AM
Last Updated : 18 May 2016 09:58 AM
பிளஸ் 2 தேர்வில் வெவ்வேறு தொழிற் பாடங்களில் நாகை மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஏ.பாரத், மின் இயந்திரங்களும், சாதனங்களும் என்ற பாடத்தில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1,088.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அய்யப்பன், கட்டிடப் பட வரைவாளர் (டிராப்ட்ஸ் மேன்) பாடத்தில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பள்ளி மாணவர் டி.சுதாகரன் 598 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1,080.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT