Published : 19 May 2016 07:54 AM
Last Updated : 19 May 2016 07:54 AM

தென்காசி சாவடியில் 57% மறுவாக்குப்பதிவு

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி சட்டப்பேரவை தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் நேற்று நடைபெற்ற மறு வாக்குப் பதிவில் 57.09 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இத்தொகுதியில் பொன் னம்பலம் நடுநிலைப் பள்ளியில் உள்ள 56-வது வாக்குச்சாவடியில் கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 592 வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால், வாக்குப்பதிவு தொடங்குமுன் மாதிரி வாக்குப்பதிவின்போது பதி வான வாக்குகளை அழிக்காமல் விட்டதால் அந்த வாக்குகளும் பதிவான மொத்த வாக்குகளுடன் சேர்ந்தது தெரியவந்தது. இதை யடுத்து இந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் பொது பார்வையாளர் பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணை யம் அனுமதி தந்தது.

அதன்படி நேற்று மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 57.09 சதவீத வாக்குகள் பதிவாகின. 16-ம் தேதி இந்த வாக்கு சாவடியில் 592 வாக்குகள் பதிவாகியிருந்தன. நேற்று 33 வாக்குகள் குறைவாக 559 வாக்குகளே பதிவாகியிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x