Published : 09 May 2016 09:51 AM
Last Updated : 09 May 2016 09:51 AM

உளுந்தூர்பேட்டையில் 5 நாட்கள் விஜயகாந்த் பிரச்சாரம்

தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தான் போட்டியிடுகிற உளுந்தூர்பேட்டை தொகுதியில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். அதன்படி, 9-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வாக்கு சேகரிக்கும் விஜயகாந்த், 11-ம் தேதி, திருச்சியில் நடைபெறும் தேமுதிக - ம.ந.கூட்டணி தமாகா அணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து, 12-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி மாலை வரை உளுந்தூர்பேட்டையில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். 14-ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றி தனது தேர்தல் பிரசாரத்தை முடிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x