Published : 10 May 2016 08:36 AM
Last Updated : 10 May 2016 08:36 AM
கோவை, திருப்பூர், பரமக்குடி யில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் நேற்றைய பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
கடந்த 4-ம் தேதி பட்டுக் கோட்டை, கன்னியாகுமரி, தென் காசி, மதுரையில் அமித்ஷா பிரச்சாரம் செய்தார். 2-வது கட்ட மாக நேற்று கோவை, திருப்பூர், பரமக்குடியில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் கடைசி நேரத் தில் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ‘‘உடல்நிலை காரணமாக அமித்ஷாவின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, பிரதமர் மோடி யின் பி.ஏ., எம்.ஏ., சான்றிதழ் களை வெளியிட்டார். இதன் காரணமாகவே அவர் பிரச் சாரத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.
வரும் 13-ம் தேதி சென்னை, திருத்தணியில் அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT