Published : 14 May 2016 08:56 AM
Last Updated : 14 May 2016 08:56 AM
பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பூண்டி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் வின்சென்ட் தலைமையில் நேற்று வாகன சோதனை நடைபெற்றது. அப்போது, சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து திருவாரூர் நோக்கிச் சென்ற சரக்கு ஆட்டோவில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை ஆய்வு செய்த போது, அதில் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பன்னீர்செல் வத்தின் பெயர், இரட்டை இலை சின்னம், அவரது படம் பொறிக்கப்பட்டிருந்ததும், பேட்டரி இணைப்பு கொடுக்கப் பட்டிருந்ததும், பட்டனை அழுத்தினால் அதற்கு நேராக உள்ள விளக்கு எரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
ஆட்டோ ஓட்டுநர் கைது
இதையடுத்து, 500 மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. சரக்கு ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் கைது செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT