Published : 05 May 2016 08:36 AM
Last Updated : 05 May 2016 08:36 AM

அடிக்கடி விபத்துகள் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் புதிய கண்ணாடிகள் பொருத்தம்

அடிக்கடி விபத்துகள் ஏற்படு வதை தவிர்க்க சென்னை விமான நிலையத்தில் விரிசல் இருக்கும் கண்ணாடிகளை அகற்றிவிட்டு புதிய கண்ணாடிகள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் புதுப் பிக்கப்பட்டு திறக்கப்பட்டதில் இருந்து கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள், மேற்கூரைகள் அவ்வப்போது உடைந்து விழுவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து விழு வதை தடுக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. சிறு விரிசல் இருக்கும் கண்ணாடிகளை அடையாளம் கண்டுபிடித்து, அவற்றை உடனே நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x