Published : 12 May 2016 01:17 PM
Last Updated : 12 May 2016 01:17 PM

மக்களை சந்திக்க ஜெயலலிதாவுக்கு பயம்: குஷ்பு குற்றச்சாட்டு

கரூர் தாந்தோணிமலையில் காங்கிரஸ் வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியனை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு பேசியது:

அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. ஜெயலலிதாவின் அராஜக, சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கரூரில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை கூட விலைக்கு விற்று அதிலும் லாபம் பார்க்கிறது இந்த அரசு.

அதிமுக வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் அவர்களை மக்கள் அடித்துத் துரத்துகின்றனர். ஜெயலலிதா மக்கள் மத்தியில் செல்லவே பயப்படுகிறார். மக்களைச் சந்தித்தால் கேள்வி கேட்பார்கள் என்பதால் உயரமாக மேடை அமைத்து அதில் பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுவிடுகிறார்.

கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது தொகுதி மாறி அரவக்குறிச்சியில் போட்டியிடுகிறார். இங்கு போட்டியிட்டால் மக்கள் அவரை அடித்துத் துரத்தி விடுவார்கள்.

இவ்வாறு குஷ்பு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x