திருவண்ணாமலையில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையை மகிழ்ச்சி  யுடன் தூக்கிய மருத்துவ உதவியாளர்.
108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தையை மகிழ்ச்சி யுடன் தூக்கிய மருத்துவ உதவியாளர்.
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்காவாடி கிராமத்தில் வசிப்பவர் சிவா. இவரது மனைவி சத்யா(23). நிறைமாத கர்ப்பிணியான இவர், தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று காலை பிரசவ வலி அதிகரித்ததால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ உதவியாளர் முனியப்பன், ஓட்டுநர் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள், 108 ஆம்புலன்சில் சத்யாவை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். ராதாபுரத்தில் வந்தபோது, வலியால் துடித்த சத்யாவுக்கு மருத்துவ உதவியாளர் முனியப்பன் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு காலை 9.39 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், தாயும் சேயும் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால், உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in