கடலூரில் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு

கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு பகுதியில் வீட்டின் வளர்ப்பு நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தினர்.
கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு பகுதியில் வீட்டின் வளர்ப்பு நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தினர்.
Updated on
1 min read

கடலூர்: கடலூர் முதுநகர் அருகேயுள்ள காரைக்காடு, மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் சங்கர். இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ஒரு நாய்க்கு ‘ஜாக்கி’ என்று பெயரிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகி றார்.

ஜாக்கி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த, சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து நேற்று தங்களது நெருங்கிய உறவினர்களை அழைத்து சீர்வரிசைகள் வைத்து,ஜாக்கியின் கழுத்தில் தங்கச் சங்கிலி மற்றும் மாலை அணிவித்து, நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர். வளர்ப்பு நாய்க்குவளைகாப்பு வைத்த இந்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in