Published : 06 May 2016 07:40 AM
Last Updated : 06 May 2016 07:40 AM

தேர்தல் ஆணையம் இதுவரையில் ரூ.82 கோடி பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகளையொட்டி தேர்தல் பறக்கும் படையும், நிலையான கண்காணிப்புக் குழுவும் இதுவரையில் ரூ.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 3-ம் தேதி வரையில் பறக்கும் படையினரால் ரூ.29 கோடியே 28 லட்சத்து 14 ஆயிரத்து 349-ம், நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.30 கோடியே 39 லட்சத்து 51 ஆயிரத்து 213-ம், காவல் துறையினரால் ரூ.45 லட்சத்து 74 ஆயிரத்து 747-ம் ரொக்கமும், வருமான வரித்துறையினரால் ரூ.21 கோடியே 85 லட்சம் மதிப்புள்ள ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x