Published : 26 May 2022 07:35 AM
Last Updated : 26 May 2022 07:35 AM

கொடைக்கானலில் விரைவில் ஹெலிகாப்டர் சுற்றுலா

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான தமிழ்நாடு ஓட்டலில் தங்கும் அறைகள், உணவுக் கூடம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில், சாகச சுற்றுலாஉள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளரூ.1.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மன்னவனூரில் சுற்றுலா துறைக்கு 5 ஏக்கர் பரப்பளவில் வருவாய்த் துறையினர் ஒதுக்கி உள்ள இடத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடங்க இறங்குதளம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளின் திட்ட அறிக்கைகள் தயார்செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஹெலிகாப்டர் சேவைதொடங்க முயற்சி எடுக்கப்பட்டுஉள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x