Published : 14 May 2016 09:22 AM
Last Updated : 14 May 2016 09:22 AM
குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பறக்கும்படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஆலத்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும்படை அதிகாரி மனோகரன் அளித்த புகாரின்பேரில், ஆலத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்த திமுக கிளை செயலாளர்கள் சக்திவேல், அன்பழகன் ஆகிய 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.5,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT