Published : 21 May 2016 08:33 PM
Last Updated : 21 May 2016 08:33 PM

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் பதிவு செய்வதற்கு கடைசி நாள் மே 24-ம் தேதி என்றும், பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க கடைசி நாள் மே 27-ம் தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும், அதேபோல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31-ம் தேதி வரையும், அதேபோல், விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜுன் 4-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x