Published : 10 May 2016 08:25 AM
Last Updated : 10 May 2016 08:25 AM

வைகோவுக்கு கருப்புக் கொடி

சாதி ஒழிப்பு மாநாட்டில் அதியமான் பேசியதை தற்போது நாகை திருவள்ளுவன் பேசியதாக வாட்ஸ்-அப்பில் உலவ விட்டுக் கொண்டிருப்பதாக வைகோ தெரிவித்தார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தமிழ்ப் புலிகள் வேட்பாளர் நாகை திருவள்ளு வனுக்கு வாக்கு சேகரிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று குண்டடம் வந்தார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டுவதற்காக குண்டடம் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்டோர் குண்டடத்தில் கருப்புக் கொடிகளுடன் கூடினர். வைகோ பிரச்சாரம் செய்யும் இடத்துக்கு கருப்புக் கொடிகளுடன் செல்ல முயன்றனர்.

போலீஸார் அவர்களை கைது செய்து குண்டடம் வடுகநாதர் கோயில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x