Published : 15 May 2016 10:38 AM
Last Updated : 15 May 2016 10:38 AM

இந்திய தொழில் முனைவோர் அமைப்பு தொடக்கம்

நாட்டில் உள்ள தொழில்முனை வோர்களை இணைப்பதற்காக இந்திய தொழில் முனைவோர் என்ற அமைப்பு தொடங்கப் பட்டுள்ளது.

356 மில்லியன் இளைஞர்களை கொண்ட இந்தியாவை வேலை தேடும் நாடாக இல்லாமல், வேலை வழங்கும் நாடாக உருவாக்கு வதற்காக நாட்டில் உள்ள தொழில் முனைவோர்களை இணைக் கும் வகையில் இந்திய தொழில் முனைவோர் (இசிஐ) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் விழா

சென்னையில் நடைபெற்ற இதற்கான தொடக்க விழாவில் நடிகரும், டேலன்ட் மேக்ஸிமாஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், மேலாண் இயக்குநருமான அர்விந்த் ஸ்வாமி, பொன்னாணி போர்ட் மற்றும் சுபர்னரேகா போர்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரமணி ராமசாமி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநரும், இந்திய தொழில் முனைவோர் அமைப்பின் நிறுவன உறுப்பினருமான எஸ்.அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் 10 இளம் தொழில் முனைவோர்கள் கவுரவிக் கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x