Published : 12 May 2016 08:41 AM
Last Updated : 12 May 2016 08:41 AM
தன்னைப் பற்றி அவதூறாக பேட்டியளித்ததாக கூறி காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தமிழக ஆளுநர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக ஆளுநர் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய் துள்ள ஒரு மனுவில், ‘‘கடந்த 30.4.16 அன்று தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
து ணைவேந்தர் நியமனத்தில் ரூ.15 கோடி பெறுவதாகவும், தமிழக முதல்வரின் எடுபிடி போல செயல்படுவதாகவும் ஆளுநர் மீது அவதூறு குற்றச்சாட்டு கூ றியுள்ளார். எனவே அவர் மீது அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அதில் கோரியுள்ளார். ஆளுநர் சார்பில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொ டருவது இதுவே முதல் முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT