Published : 24 May 2022 06:08 AM
Last Updated : 24 May 2022 06:08 AM

பெண் சுகாதார தன்னார்வலர்களின் ஊதியம் உயர்த்தப்படுமா?

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்த மக்களைத் தேடி மருத்துவ பெண் சுகாதார தன்னார்வலர்கள்.

கடலூர்: மக்களை தேடி மருத்துவ திட்ட பெண் சுகாதார தன்னார்வலர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றைஅளித்தனர். மனுவில் கூறியிருப்பது:

கடலூர் மாவட்டத்தில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பகுதிநேர பெண் சுகாதார தன்னார்வலர்களாக, கடந்த 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ரத்த அழுத்தம்,நீரிழிவு நோய் மற்றும் தொற்று நோய்களை, கண்டறிந்து அவர்களின் இல்லத்திற்கு சென்று மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறோம். செல்போன் செலவு, டூவீலருக்கான பெட்ரோல் செலவு உள்ளிட்டவைகளை நாங்களே கவனித்துக்கொள்கிறோம் ஆனால் எங்களுக்கு மாத ஊதியமாகரூ.4 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே எங்கள் குடும்ப சூழ்நிலை கருதி, ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிககப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x