Published : 23 May 2022 06:02 AM
Last Updated : 23 May 2022 06:02 AM

சுங்குவார்சத்திரம் அருகே 2 புள்ளி மான்கள் மர்மமாக உயிரிழப்பு

சுங்குவார்சத்திரத்தை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2 புள்ளி மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.

சுங்குவார்சத்திரத்தை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2 புள்ளி மான்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.

சுங்குவார்சத்திரத்தை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் 2 புள்ளி மான்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அந்த இடத்தின் காவலாளி பெரும்புதூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த புள்ளி மான்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். வனத்துறை அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில் இந்த 2 புள்ளி மான்களும் சண்டையிட்டுக் கொண்டு இறந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர். புள்ளி மான்கள் இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது யாரேனும் வேட்டையாடிக் கொன்றார்களா? என்ற கோணத்திலும் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x