Published : 12 May 2016 09:04 AM
Last Updated : 12 May 2016 09:04 AM
தேமுதிக உள்ளிட்ட 6 கட்சிகளின் கூட்டணி மக்களின் அபரிதமான ஆதரவை பெற்று வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தெரிவித்தார்.
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி சார்பில் மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக க.பீம்ராவ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு ராமாபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்கரய்யா பேசியதாவது:
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பெருமுதலாளி களை பாதுகாக்கக் கூடிய கட்சிகள். இந்த கட்சிகள் பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுகளுக்கு சேவகம் செய்வதால்தான் மக்களுக்கு எதிரான கெடுதல்கள் பிறக்கின்றன.
50 ஆண்டுகளாக இரு கட்சிகளின் ஆட்சிகளும் பெருமுத லாளிகளுக்கு சாதகமாகவே நடந்துள்ளன. தேவைப்படும்போது தொழிலாளர்கள், விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவியுள்ளன. மதவாத சக்தியான பாஜகவை ஜனநாயக சக்திகள் தனிமைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக விஜயகாந்த் பாஜகவை தனிமைப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஊழற்ற ஆட்சி நடக்கவேண்டும் என்றால், தேமுதிக உள்ளிட்ட 6 கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். மக்களின் அபரிதமான ஆதரவை 6 கட்சிகளின் கூட்டணி பெற்று வருகிறது என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT