பஞ்சு. நூல் விலை உயர்வு: மே 27-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

பஞ்சு. நூல் விலை உயர்வு: மே 27-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் வரும் 27-ம் தேதி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகின்ற (மே 27) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in