முருகன் மீதான வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வழக்கில் இறுதி வாதம் முடிந்ததால் மே 24-ம் தேதி தீர்ப்பு

காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட முருகன். படம்: வி.எம்.மணிநாதன்.
காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட முருகன். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர்: வேலூர் சிறையில் முருகன் மீதான வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வழக்கு விசாரணையில் இருதரப்பின் இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு சிறையில் இருந்தபோது வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் குரூப் கால் முறையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜே.எம் 1-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் முருகனை காவல் துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, முருகன் தரப்பில் அவரே தனது இறுதி வாதத்தை எடுத்துரைத்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகன் ஆஜராகி இறுதி வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து வழக்கை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்த மாஜிஸ்திரேட் அருண்குமார், அன்றைய தினம் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றார். பின்னர், முருகனை காவல் துறையினர் பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘முருகன் தனது இறுதிதரப்பு வாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்கு சிறைவிதிகளின்படி ஏற்கெனவே தண்டனை அளித்த நிலையில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மீண்டும் தண்டிக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உயர்நீதிமன்ற உத்தரவையும் அவர் சமர்ப்பித்தார். தன்னை பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிறை கண்காணிப்பாளர் மட்டுமே புகார் அளிக்க வேண்டிய இடத்தில் ஜெயிலர் அளித்திருப் பது முரணானது என்று வாதித்திட் டதுடன் குரூப் கால் முறையில் பேசக்கூடாது என்ற விதி எங்கும் இல்லை என்றும் தெரிவித்தார். தனது கருத்துக்கு தேவையான ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதேபோல், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகன், அரசு சாட்சியங் கள் சரியான முறையில் குற்றச்சாட்டு களை பதிவு செய்து சாட்சியமும் அளித்துள்ளனர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in