Published : 19 May 2022 06:34 AM
Last Updated : 19 May 2022 06:34 AM

கோவை - போத்தனூர் இடையே பராமரிப்புப் பணியால் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை-போத்தனூர் ரயில்நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பிலாஸ்பூரிலிருந்து வரும் 23-ம் தேதி காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, 24-ம் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைய வேண்டிய எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22815), மாற்றுப்பாதையான இருகூர்-போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரயில் கோவை ரயில்நிலையம் வராது. அதற்குப் பதில், போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும்.

இதேபோல, பாட்னாவிலிருந்து வரும் 24-ம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, 26-ம் தேதி மாலை 5.02 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைய வேண்டிய எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22670), மாற்றுப்பாதையான இருகூர்-போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூர் ரயில்நிலையத்தில் நின்று செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x